வரலாறு என்றால் என்ன? மனிதன் இவ்வுலகில் நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறான்.அவ்வகையில் அவன் வாழ்ந்து வந்த இந்த காலத்தில், 1.அவன் வாழ்ந்து வந்த பிரதேசம் 2. சூழலை அமைத்துக் கொண்ட விதம் 3. சூழல் மற்றும் சமூக ஒருமைப்பாடு ஆகியவற்றை விளக்கும் ஒரு கருவியே வரலாறு என்கிறோம். நாம் வரலாற்றை எவ்வாறு கற்பது? முற்காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் மற்றும் அக்காலத்தில் பாவிக்கப்பட்டப் பொருட்கள் மூலம் வரலாற்றை அறிந்து கொள்கிறோம்.மேலும் எமது முதாதையர்கள் கூறும் கதைகள் மூலமும் வரலாற்றினை தெரிந்துக் கொள்கிறோம். வரலாற்றை கீழ்வரும் இரண்டு முறைகளில்,கற்றுக் கொள்ளலாம். 1. இலக்கிய மூலாதாரம் 2.தொல்பொருள் மூலாதாரம் என்பவைகள் மூலம் இலகுவாக கற்றுக் கொள்ளலாம். 1.இலக்கிய மூலாதாரம் எழுத்து வடிவில் காணப்படும் ஆதாரங்கள் ஆகும் உதாரணமாக, ..... கர்ண பரம்பரை கதைகள், ...